குட்டி கவிதைகள்
Thursday, October 13, 2011
நோட்டு புத்தகம்
என் பேனாவின் முத்ததிற்காக
காத்திருக்கும் காகித காதலி
-
நோட்டு புத்தகம்
Monday, October 3, 2011
மெரினா பீச்
மயக்கம் கொண்ட மானும்
மதி கெட்ட மயிலும்
மனிதம் மறந்து ...
மெரினா பீச்
Monday, July 4, 2011
ஒருதலை காதல்
சந்திரன் பூமியை
ஒருதலையாய் காதலிக்கிறானோ - தினமும்
தேடியும் வருகிறான்
தேய்ந்தும் போகிறான்
தனிமையில் பேசும்
தடம் அறியாது நடக்கும்
தனக்கு தானே பேசும்
தனிமையில் சிரிக்கும்
உணர்வுள்ள பொம்மைகள்
-
ஹெட்செட் மாட்டிய செல்லுயிர்கள்
கட்டாய கலியாணம்
அவள் துடிக்கத் துடிக்க
நடந்த கட்டாய கலியாணம்
-
என் கைக்கடிகாரம்
என் அழுகைக்கு காரணம் சொன்னவள்
என் காதலி
என் சிரிப்புக்கும்
என் மௌனத்திக்கும் வேண்டுமானால்
காரணம் சொல்லலாம்
ஆனால்
என் அழுகைக்கும்
காரணம் சொன்னவள்
என் தாய்
தான்
Sunday, May 1, 2011
எனக்காக துடிக்கிறாள்
என்னால் துடிக்கிறாள்
எனக்காக துடிக்கிறாள்
-
என் இதயம்
அள்ளி அனைக்கிறேன்
பசியறிந்து பால் கொடுத்தவளின்
நினைவுகள் தட்ட
அள்ளி அனைக்கிறேன்
அவளின் புகைப்படத்தை
-
எல்லையில் ராணுவ வீரன்.
Thursday, April 7, 2011
அம்மா
அகவை ஐந்து என்றால்
அழும்முன்பே அள்ளி அனைத்திருப்பாள்
சம வயது என்பதால்
சத்தம் கேட்டும்
சகித்துக் கொண்டாயோ !
அம்மா ...
ஊர் உளறல் என்றாலும்
என் உயிர் உள்ள வரை
நீதான் என்
அம்மா ...
Tuesday, March 15, 2011
கடிகார முட்கள்
மணிக்கொரு முறை
ஊடலும் கூடலும்
-
கடிகார முட்கள்
தொலைபேசி மணியொலி
உனக்காக அழுகிறேன்
அணைக்க மாட்டாயா !
-
தொலைபேசி மணியொலி
குடி
குடிக்கக் குடிக்கக் காலியானது
பாட்டில் மட்டுமல்ல
- வாழ்நாளும் தான்
சிகரெட்
தனக்கு தானே
கொல்லி வைக்கிறான்
-
சிகரெட்
அப்படியென்ன காதல்
அப்படியென்ன காதல்
சூரியன் முன்
வெட்கி நானுகிறாள்
- வெள்ளி பனி
மழைத்துளியும் பெண்தான்
சந்தேகமில்லை
மழைத்துளியும் பெண்தான்
மேகத்தை பிரிந்து
மண்ணை மனக்கிறாளே !
என் மகள்
என்னை சுமந்த தாயை
நானும் சுமக்கிறேன்
-
என் மகள்
வடிவில்
நினைவுகள்
நிஜத்தில் நிழல்
ஆனால்
நிஜத்தின் நிழல்
-
நினைவுகள்
தூக்கில் தொங்கி விடு
எனக்கு பதில்
தூக்கில்
நீ தொங்கி விடு
- விடைத்தாள்களை நூலில் கட்டினேன்
வானவில்
வானளவு சென்றாலும்
வளைந்து கொடுப்பேன்
-
வானவில்
மழைத்துளி
மேகத்தாய் குளிப்பாட்ட
பூமகள் குளிக்கிறாள்
-
மழைத்துளி
Monday, March 14, 2011
- டாஸ்மார்க்
நியாய விலை கடை
ஒருமுறை உயிர்விட ரூ . 76
- டாஸ்மார்க்
வெட்கத்தில் சிவந்தாளோ !
இன்னும்
நனைய நனைய
வெட்கத்தில் சிவந்தாளோ !
மழையில் செம்மண்
அம்மா
என்னில்
ஆயிரம் முறை ஒலிக்கும் ஆலயமணி
அம்மா
நான் தொழும் ஆலயமும் நீ
அம்மா
Saturday, March 12, 2011
அன்னை தெரசா
அன்னை தெரசா
சேவையே
சேலைகட்டி நடந்தது
இரவில் நடமாடதே
இரவில் நடமாடதே
நிலவே !
பொல்லாத உலகம் உன்னையும்
தகாதவள் எனலாம்
ஓய்வு
ஓய்வு
- வார்க்கபடாத
வெள்ளிக்கட்டி
ஆசிரியர்
என் தாய் தான் எனக்கு தெய்வம்
அவளும் உன்னை வணங்கும் போதுதான் தெரிகிறது
நீ -
தெய்வத்திற்கு
மேல் என்று
காதல் சளிக்கவில்லை !
எத்தனை நபரை காதலித்தும்
காதல் சளிக்கவில்லை !
என்னை கருவில் சுமந்த
தாய் முதல்
என் கருவான
மகள் வரை
...
என்னையும் மன்னித்தாள்
என்னையும் மன்னித்தாள்
என்னிடம் பெற்ற ஐம்பது பைசாவை
என் முகத்தில் விசிறிய
பிச்சைக்காரி
நிம்மதி
நிம்மதி
-
பணிஅலுப்பைக் கண்டு தலைகோதும்
தாயின் விரலில் ...
தடைகள்
தடைகள்
-
வெற்றி பாதையின்
திசைக்காட்டி பலகைகள்
வள்ளுவன் சாயலில் ...
அன்பினால் அகதியும் சொந்தமாவர் அக்திலார்
உடையினும் அகதி ஆவர்
வள்ளுவன் நினைவாக ...
உளிதன்னை தாங்கும் சிலைபோல மாந்தரும்
வலிதன்னை நீர்த்தல் நலம்
தலையணை
என் உப்பு கண்ணீரையும்
என்னில் உதிர்ந்த முத்தத்தையும்
முழுதாய் பதித்த தோழி
-
தலையணை
முதியோர் இல்லம்
பூஜிக்க தவறிய தெய்வங்களின் கோயில்
-
முதியோர் இல்லம்
Wednesday, March 9, 2011
மழைத் துளி
மழைத் துளி
மேகத்தாய் பூமிக்கு
பாலூட்டுகிறாள்
சத்தமில்லா சுகபிரசவம்
சத்தமில்லா சுகபிரசவம்
- புத்தகத்தினுள்
குட்டி ஈனும்
மயிலிறகு
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)