குட்டி கவிதைகள்
Monday, July 4, 2011
ஒருதலை காதல்
சந்திரன் பூமியை
ஒருதலையாய் காதலிக்கிறானோ - தினமும்
தேடியும் வருகிறான்
தேய்ந்தும் போகிறான்
தனிமையில் பேசும்
தடம் அறியாது நடக்கும்
தனக்கு தானே பேசும்
தனிமையில் சிரிக்கும்
உணர்வுள்ள பொம்மைகள்
-
ஹெட்செட் மாட்டிய செல்லுயிர்கள்
கட்டாய கலியாணம்
அவள் துடிக்கத் துடிக்க
நடந்த கட்டாய கலியாணம்
-
என் கைக்கடிகாரம்
என் அழுகைக்கு காரணம் சொன்னவள்
என் காதலி
என் சிரிப்புக்கும்
என் மௌனத்திக்கும் வேண்டுமானால்
காரணம் சொல்லலாம்
ஆனால்
என் அழுகைக்கும்
காரணம் சொன்னவள்
என் தாய்
தான்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)