Monday, May 6, 2013

அம்மா உன் பிறந்தநாள்

அம்மா 
பிறந்தநாள் உனக்கு 
பிறவி பலன் எனக்கு 




சிலையை செதுக்கி 
உயிர் கொடுத்தாய் 
           - ஓடி விடுவாய் என அறியாமல் 

விலை கொடுத்தாவது 
வாங்கி விடு 
             -வீழும் முன் 

காகிதமாய் இருந்தவனை 
பட்டமாய் பறக்க விட்டாய் 
பறக்கும் போது பதறிபோனேன் 
         - உன் உருவம் சிறியதாய் தெரியுமோ !

பெற்ற பலனுக்கு 
பெயர் வைத்து 
பேர் வாங்கும் வேளையில் 
இடம் பெயர்ந்தயோ !

குழலினும் யாழினும்
மழலை சொல் இனிது
மழலை இங்கே அழுகிறது 
        - மாதா குரல் கேட்க 

வீதி வந்தால் 
வீடு வந்து திரும்பும் மணம் 
          வீம்பி அழும் குழந்தையை பார்க்க
          என்று நினைக்கும் 

ஒற்றை ரோஜா கருகினாலே 
தாங்காத மனதிற்காக 
          -பெற்ற மொட்டு காத்திருகிறது 

ஆண்டவனிடம் கேட்கிறேன் 
இனியும் இப்படி பிரிவோமென்றால் 
           - பிறப்புகாலம் பத்துமாதம் 
                                     அதிகபடுத்து 
                      எனக்கு மட்டுமாவது 



No comments:

Post a Comment

மறந்துட்டியா ! ! !