அம்மா
பிறந்தநாள் உனக்கு
பிறவி பலன் எனக்கு
சிலையை செதுக்கி
உயிர் கொடுத்தாய்
- ஓடி விடுவாய் என அறியாமல்
விலை கொடுத்தாவது
வாங்கி விடு
-வீழும் முன்
காகிதமாய் இருந்தவனை
பட்டமாய் பறக்க விட்டாய்
பறக்கும் போது பதறிபோனேன்
- உன் உருவம் சிறியதாய் தெரியுமோ !
பெற்ற பலனுக்கு
பெயர் வைத்து
பேர் வாங்கும் வேளையில்
இடம் பெயர்ந்தயோ !
குழலினும் யாழினும்
மழலை சொல் இனிது
மழலை இங்கே அழுகிறது
- மாதா குரல் கேட்க
வீதி வந்தால்
வீடு வந்து திரும்பும் மணம்
வீம்பி அழும் குழந்தையை பார்க்க
என்று நினைக்கும்
ஒற்றை ரோஜா கருகினாலே
தாங்காத மனதிற்காக
-பெற்ற மொட்டு காத்திருகிறது
ஆண்டவனிடம் கேட்கிறேன்
இனியும் இப்படி பிரிவோமென்றால்
- பிறப்புகாலம் பத்துமாதம்
அதிகபடுத்து
எனக்கு மட்டுமாவது
No comments:
Post a Comment
மறந்துட்டியா ! ! !